ADS

மதுரை விமான நிலையத்தில் ஓட்டமெடுத்த திருமாவளவன்

 மதுரை: “சேர, சோழ, பாண்டியர்கள் ஆரியத்துக்கு கொடி பிடித்தவர்கள். கோவில்களில் இருந்து தமிழை விரட்டி அடித்தவர்கள். தங்கள் பெயரைக் கூட வட மொழியில் வைத்துக் கொண்டனர்,” என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சில நாட்களுக்கு முன் பேசினார்.




இது, தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற் படுத்த, 'தேர்தல் நேரத்தில் இப்படிப்பட்ட பேச்சுகளெல்லாம் தேவையா?' என, தி.மு.க., தலைமையில் இருந்து திருமா வளவனுக்கு கேள்வி எழுப்பப்பட்டது.



கூடவே, இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாக சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்தப் பிரச்னையை அப்படியே அமுக்கிப் போட முடிவெடுத்த திருமாவளவன், தொடர்ந்து அதுகுறித்து பேசுவதை தவிர்த்து வருகிறார்.



இந்நிலையில், நேற்று சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை சென்ற அவரிடம் இது தொடர்பாக கேள்விகள் கேட்க, மதுரை விமான நிலைய வாயிலில் பத்திரிகையாளர்கள் திரண்டிருந்தனர். அதை கண்டதும், தொண்டர்களின் வரவேற்பைக்கூட ஏற்றுக்கொள்ளாமல், ஓட்டமும் நடையுமாக சென்று காரில் ஏறி புறப்பட்டார்.

Post a Comment

0 Comments