ADS

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மு க ஸ்டாலின் கடிதம்

 இலங்கை கடற்படை கைது செய்த இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவு துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் பேசியதற்கு தமிழகம் மற்றும் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். 

 தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 92 மீன்பிடி படகுகள் இலங்கை வசம் உள்ளதாகவும் அவற்றில் சில பாடல்கள் 2018 ஆம் ஆண்டில்  சிறை பிடிக்கப்பட்டதால் அவை முற்றிலும் சேதம் அடைய கூடும் என தெரிவித்துள்ள முதலமைச்சர், படகின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அவர்களது படகின் உரிமையை கோர வேண்டும் என்று நிபந்தனை பேரில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்றும், தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக அவர்களால் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் விடுவிக்க இந்திய அரசு உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை கோருவதாகவும், இலங்கையில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மீன்பிடிப் படகின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க தாம் வலியுறுத்துவதாகவும், முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இக்கடிதத்தில் "கடந்த சில மாதங்களில் கைது செய்யப்பட்ட 18 மீனவர்களை சொந்த நாட்டுக்கு அழைத்துவர உதவியதற்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்" இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது



Post a Comment

0 Comments