ADS

இந்தியாவில் கோவிட் தடுப்பூசி கொள்முதல் விலை உயர்வு

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளின் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.



வரும் டிசம்பர் மாதம் வரை 65.5 கோடி கோவிட் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான புதிய ஒப்பந்தங்களை சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களுடன் மத்திய அரசு இறுதி செய்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் கோவிட் தடுப்பூசி கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. தடுப்பூசி கொள்முதல் விலை உயர்வு, தடுப்பூசி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி கொள்முதல் விலை ரூ.205 ஆகவும், கோவாக்சின் கொள்முதல் விலை ரூ.215 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த இரு தடுப்பூசிகளும் தலா ரூ.150க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது விலை உயர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments